தெரு நாய்கள் தொல்லை

Update: 2023-05-07 12:53 GMT

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை துரத்துவதும், தனியாக நடந்து செல்பவர்களை கடிக்க பாய்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சில சமயங்களில் நாய்கள் துரத்துவதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழுந்து சிறு, சிறு காயங்கள் ஏற்படும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தெரு நாய்களை பிடிக்க வேண்டும்.

- ராஜா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்