கொசு மருந்து தெளிக்க வேண்டும்

Update: 2024-08-25 21:10 GMT

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை பள்ளம் அருகில் கஸ்பா பகுதியில் பல ஆண்டுகளாக ஓடாத கழிவுநீர் குட்டை கொசு உற்பத்தி மையமாக செயல்பட்டு வருகிறது. அதில் கொட்டப்படும் மக்கும், மக்காத குப்பைகள் பரவலாக மிதக்கிறது. இதனால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. கழிவுநீர் குட்டையில் கிடக்கும் குப்பைகளை அகற்றி டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மே.நாதமுனி, குடியாத்தம்.

மேலும் செய்திகள்