மேம்பாலத்தில் சுகாதார சீர்கேடு

Update: 2024-08-04 19:37 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காட்பாடி செல்லும் பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் மாலைப் பொழுதில் பொது மக்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகளின் சாணத்தால் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். சுகாதார சீர்கேடாக இருக்கும் பாலத்தை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்