சிதைக்கப்பட்ட கல்மேடை

Update: 2023-02-22 16:23 GMT

வாலாஜாவில் பல வருடங்களாக சுடுகாட்டின் நுழைவு வாயிலில் அரிச்சந்திரன் சிலை முன்பு இறந்தவரின் உடலை கிடத்தி இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது. அதன் பின்னரே சுடுகாட்டுக்குள் பிணத்தை எடுத்துச் சென்று புதைப்பர் அல்லது எரிப்பார்கள். இறந்தவர்களின் உடலை கிடத்தி வைக்கும் கல்மேடை இரண்டாக உடைக்கப்பட்டு சிதைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தக் கல்மேடை சீரான முறையில் இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இதனால் இறந்தவரின் உடலை சரியான முறையில் வைத்து இறுதிச் சடங்குகள் செய்ய முடியவில்லை. உடனடியாக வாலாஜா நகராட்சி நடவடிக்கை எடுத்து கல்மேடையை அமைத்துத்தர வேண்டும்.

-வீராசாமி, வாலாஜா. 

மேலும் செய்திகள்