தரைக்கிணறால் ஆபத்து

Update: 2023-12-31 17:33 GMT

ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா கணபதி நகரில் பாழடைந்த தரைக்கிணறு உள்ளது. அதன் அருகில் தனியார் குழந்தைகள் பள்ளி உள்ளது. அந்தப் பகுதியில் மழைப் பெய்து இதுவரை தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் தரை எது, கிணறு எது என்று தெரியாமல் அச்சமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் குழந்தைகள் தவறி கிணற்றில் விழ வாய்ப்புள்ளது. அந்தக் கிணற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவில் தொல்லையாக உள்ளது. ஆபத்தான தரைக்கிணறை மூட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-கோ.கீர்த்திவாசன், ஆற்காடு. 

மேலும் செய்திகள்