செங்கம் நகரில் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கவும், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் இல்லை. ஒருசில இடங்களில் கேமராக்கள் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ளன. எனவே இவற்றை பழுது நீக்கி பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிங்காரவேல், செங்கம்.