பொங்கல் வேட்டி-சேலை வினியோகம் செய்யவில்லை

Update: 2023-03-22 16:28 GMT

செங்கம் சுற்று வட்டாரப் பகுதியில் சில இடங்களில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் இலவசமாக கொடுக்கப்பட்ட வேட்டி-சேலைகள் பொதுமக்களுக்கு முழுவதுமாக வினியோகம் செய்யவில்லை. குறிப்பாக செங்கம் பேரூராட்சி, செங்கம் அருகில் உள்ள தோக்கவாடி பகுதியில் பொதுமக்களுக்கு வேட்டி-சேலை வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து வழங்கப்படாமல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹரி, தோக்கவாடி.

மேலும் செய்திகள்