திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமக் குளக்கரை தெருவில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்தத் தெருவில் கிடக்கும் குப்பைகளை பன்றிகள் கிளறி விட்டு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பன்றிகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பன்றிகள் தொல்லைைய கட்டுப்படுத்த வேண்டும்.
-காசிம், அப்துல்லாபுரம்.