பன்றிகள் தொல்லை

Update: 2022-11-09 11:07 GMT

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டாக அப்பகுதியில் பன்றி வளர்ப்போர் தங்களது பன்றிகளை வெண்குன்றம் ஏரி அருகே வளர்ப்பதால், அவை அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளுக்கு வனத்துறை அதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயிர்களை பன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள். வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

-முருகன், வந்தவாசி.

மேலும் செய்திகள்