மனுக்கள் மீது நடவடிக்கை தேவை

Update: 2024-06-30 19:02 GMT

வேலூர் வேலப்பாடியில் தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு தேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து மனு கொடுக்கின்றனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்கிறார்கள். அதில் பட்டாவுக்கு விண்ணப்பிக்கும் மனுக்களும் காரணமின்றி ரத்து செய்யப்படுகின்றன. அதற்கு உரிய பதில் அளிக்கப்படுவதில்லை. இதை மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.

-சுரேஷ், வேலூர்.

மேலும் செய்திகள்