தடுப்பு வேலியால் மக்கள் அவதி

Update: 2022-07-23 18:31 GMT

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே கனரா வங்கி, எல்.ஐ.சி. அலுவலகம், ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு காவல்துறை சார்பில் அரசியல் கட்சிகளுக்கும், இதர பிரிவினருக்கும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கின்றனர். இதனால் வங்கி, எல்.ஐ.சி. பகுதிக்கு உள்ளே செல்லும் வாசல் பகுதி முழுவதையும் தடுப்பு வேலி வைத்து விடுகின்றனர்.

இதனால்வங்கிக்கோ இதர பணிகளுக்கோ செல்ல முடியாதபடி பொதுமக்கள், வயது முதிர்ந்தவர்கள் அவதிப்படுகின்றனர். காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்றி அனுமதி அளிக்க வேண்டும்.

-சக்திவேல், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்