நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

Update: 2024-07-07 19:27 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை இருந்தது. அதன் அருகே வணிக வளாகம் கட்டியபோது பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. ஆனால் இதுவரையில் அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அங்குள்ள சாலை சந்திப்புகளிலும், மரத்தின் நிழலிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். வயதானவர்கள் உட்கார இடம் இல்லாததால் சாலை அருகே உட்காருகின்றனர். மேலும் வெயில் தாக்கத்தினால் அவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலவன், வேலூர்.

மேலும் செய்திகள்