பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2022-10-16 11:15 GMT

வந்தவாசியில் புதிய பஸ் நிலைய சாலை நுழைவு வாயிலான சுகந்தி சந்திப்பு அருகில் நிழற்குடை இல்லாததால் பயணிகள், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கொட்டும் மழையில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த இடம் அனைத்துப் பஸ்களும் நின்று செல்லக்கூடிய பஸ் நிறுத்தம் ஆகும். எனவே அந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முருகராம், வந்தவாசி. 

மேலும் செய்திகள்