பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2022-09-15 11:30 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள மாங்கால் கூட்ரோடு ஜங்ஷனில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் காஞ்சீபுரம், வந்தவாசி, சென்னை போன்ற நகரங்களுக்கு பஸ்களில் பயணம் செய்கிறார்கள். அங்கு நிழற்குைட வசதி இல்லாததால் கடும் வெயில், கொட்டும் மழையில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒருசிலர் அருகில் உள்ள கடைகளில் நிழலுக்காக ஒதுங்கி நின்றால் பஸ்கள் போவது தெரியாமல் ஏமாற்றம் அடைகிறார்கள். எனவே மாங்கால் கூட்ரோடு ஜங்ஷனில் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-சாதிக்அலி, தூசி.

மேலும் செய்திகள்