செயல்படாத மழைநீர் அளவுமானி

Update: 2023-07-19 16:54 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி நகரம், ஆலங்காயம், காவலூர் ஆகிய பகுதிகளில் பொதுப்பணித்துறை, வனத்துறை, வருவாய்த்துறை மூலம் முக்கிய அலுவலகங்களில் நுழைவுப் பகுதியில் மழைநீர் அளவுமானி, வெப்பம் அளவுகோல் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் செயல்படாத நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் தோராயக் கணக்கை அளவில் வைத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை அளவு அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வனத்துறை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் அளவுகோல்கள் முற்றிலுமாக பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜேஷ், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்