மதுரை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை அன்றாடம் பணிக்கு செல்லும் பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலால் செல்லும் இடங்களுக்கு கால தாமதத்துடனேயே செல்லும் சூழ்நிலை உருவாகிறது. மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா?