நடவடிக்கை தேவை

Update: 2026-09-06 17:10 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இனைப்பு பாலத்தின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் ஓட்டையை மண் மற்றும் குப்பைகள் அதிகளவில் அடைத்துள்ளது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் மழைநீர் செல்ல போதிய வழியின்றி பாலத்தில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அச்சமயம் பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்