உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் வழித்தடத்தில் பொட்டையம்பாளையம் பிரிவு உள்ளது. சாலை வளைவுப்பகுதியில் அமைந்துள்ள இந்த பஸ் நிறுத்த நிழற்குடையின் மீது கார் ஒன்று மோதி நிழற்குடை சேதமடைந்தது. இதனால் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.