ஆஸ்பத்திரியை மறைத்த பிளக்ஸ் பேனர்கள்

Update: 2026-08-09 09:39 GMT

உடுமலை - பழனி முக்கிய சாலையில் மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை சுற்றி சாலையோரம் அடுக்கடுக்காக அரசியல் மற்றும் பல்வேறு விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரி முழுவதுமாக மறைக்கப்பட்டு மக்களுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கார், மோட்டார் சைக்கிள்கள் வருபவர்கள் பேனர்களுக்கு பின்னால் ஆஸ்பத்திரி இருப்பதே தெரியாததால், அவர்கள் கடந்து சென்று மீண்டும் திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆஸ்பத்திரிைய மறைத்து விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கோபாலன், மடத்துக்குளம்.

மேலும் செய்திகள்