நாய்கள் தொல்லை

Update: 2026-08-09 09:36 GMT

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பூளவாடி பிரிவில் இருந்து காமராஜபுரம் பகுதிக்கு செல்லும் வரை தெரு நாய்கள் அதிக அளவில் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்க வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள்.. மேலும் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெகன், தாராபுரம்.

மேலும் செய்திகள்