மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி மற்றும் எஸ்.ஆர்.வி.நகர் பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் இரவில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?