கடமலைக்குண்டு முதல் அண்ணாநகர் வரை ஏராளமான சாலைகள் ஆபத்தான வளைவுகளை கொண்டுள்ளது. இந்த வளைவு பகுதி உள்ள இடங்களில் சோலார் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சோலார் விளக்குகள் அனைத்தும் பழுதடைந்து உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயங்கள் உள்ளது. எனவே பழுதடைந்த சோலார் விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.