ஓசூர் மாநகராட்சி 5, 6-வது மற்றும் 13-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் ஓசூர் மாநகராட்சி சார்பில் புதிய மின் தகனமேடை மற்றும் எரிவாயு தகன மேடை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதனால் குடியிருப்பு மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இந்த திட்டத்தை கைவிட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.