எரியோடு அருகே புதுரோடு கிராமம் வழியாக திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருப்பார்கள். ஆனால் பஸ்கள் வருவது தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளன. இதனால் மாணவர்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.