கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி ஆனந்தாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகள் இல்லை. இதனால் கழிவுநீர் இப்பகுதியில் தேங்கி உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் இன்றி சாலை, கழிவுநீர் கால்வாய் என அடிப்படை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.