மூங்கில்பட்டி-கீழ்வாணி மெயின் ரோட்டில் உள்ள கம்பத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் இவை சாலையை நோக்கி இல்லாமல் தரையை நோக்கி உள்ளன. இதனால் சாலையில் நடக்கும் நிகழ்வுகள் பதிவாகாது. கேமராக்களை மேல் நோக்கி வைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?