ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதனூர் சமுதாய ஊருணி தண்ணீரை அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊருணியின் படித்துறை சேதமடைந்தும், சில இடங்களில் பெயர்ந்து விழுந்தும் காட்சியளிக்கிறது. மேலும் இதில் சிலர் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊருணி படித்துறையை சீரமைக்க முன்வார்களா?