நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூர் பிள்ளையார் கோவில் தபால் நிலையம் சந்திப்பு மிக முக்கிய பகுதியாகவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியாகும். இங்கு தபால் நிலையம், கோவில் மற்றும் வியாபார நிலையங்கள் நிறைந்த இடமாகும். இந்த சந்திப்பு பகுதியில் இதுவரை கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த தபால் நிலையத்தில் இருமுறை திருட்டு முயற்சியும் நடைபெற்றுள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சந்திப்பு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேணு, ஆளூர்.