சீரமைக்க வேண்டும்

Update: 2026-07-19 07:29 GMT

கொல்லஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட நெல்வேலி பகுதியில் இளைஞர் மன்றம் அருகில் பாயும் கால்வாயின் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். தற்போது பாலத்தின் ஒரு பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த விபத்து தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த விபத்து தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தர், நெல்வேலி.

மேலும் செய்திகள்