வடுகன்பற்றில் இருந்து கரும்பாட்டூருக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கவர் குளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கவர் குளமும், அதன் அருகில் குடிநீர் கிணறும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்திற்கு ஆற்று வெள்ளம் பாயும் மடையின் அருகில் சிலர் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், குளத்தின் தண்ணீர் மாசடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நலன்கருதி குளத்தின் மடை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கோழிக்கழிவுகளை அகற்றுவதுடன், அதனை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.