மதுரை நகர் பகுதியில் உள்ள சாலைகளில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் செல்லும் இடங்களுக்கு நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.