மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2026-06-21 17:41 GMT
கச்சிராயப்பாளையம் அடுத்த வெள்ளிமலையில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இங்கு மதுகுடிக்க வரும் மதுப்பிரியர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டும் செல்கின்றனர். இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்