தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் மெயின்ரோட்டை ஒட்டி உள்ள பொதுகிணற்றின் தடுப்புசுவர் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் சிறுவர்கள் விளையாட்டாக கிணற்றை எட்டிப்பார்க்கின்றனர். எனவே குழந்தைகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றுக்கு இரும்பு வலை மூடி அவசியம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.