வீரவநல்லூர் மோர் மடத்தில் இருந்து வெள்ளாங்குழிக்கு செல்லும் சாலையோரம் பேரூராட்சி கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. குப்பைகளை உண்ணும் கால்நடைகளும் மடிகின்றன. எனவே குப்பைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.