பயணிகள் அவதி

Update: 2026-06-21 11:27 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டும், பெரும்பாலான பஸ்கள் உள்ளே வராமல் சாலையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்வதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், முறையான வடிகால் வசதி இல்லாததால் லேசான மழை பெய்தாலே பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறி விடுகிறது. இதனால் பயணிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாத அவல நிலை நீடிக்கிறது. எனவே, அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதோடு, மழைநீர் தேங்காதவாறு வடிகால் வசதியை ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்