கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளிவரும் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் இருபுறத்தையும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் நிகழ்கின்றன. உயிரிழப்புகள் ஏதும் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.