திருப்பாதிரிப்புலியூர் ரெயில்வே மேம்பாலத்தில் அதிகளவில் செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால் மேம்பாலமானது அதன் உறுதித்தன்மையை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில்வே மேம்பாலத்தில் வளர்ந்து வரும் செடிகளை அகற்றி முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.