தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை இல்லை. பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் நின்று சிரமப்படுகின்றனர். இந்த பஸ் நிறுத்தத்திலிருந்து முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் ,வேளாங்கண்ணி , மன்னார்குடி, திருவாரூர் ,போன்றஊர்களுக்கு செல்ல இந்த பஸ் நிலையம் தான் பயன்படுகிறது.எனவே மேற்கண்ட பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், பட்டுக்கோட்டை