தெருநாய்கள் தொல்லை

Update: 2026-05-17 16:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், பூவரசகுடி, மேட்டுப்பட்டி, கைகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெருகிவரும் தெருநாய் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளில் கட்டி போடப்பட்டிருக்கும் ஆடுகளைகடித்து குதறி விடுகின்றது. இரவு நேரங்களில் சாலையில் செல்பவர்களை துரத்தி கடிக்க வருகின்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்