சங்ககிரி அடுத்த கனககிரி கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கி நடைபெற்றது. பின்னர் திடீரென சுற்றுச்சுவர் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. விரைவில் பள்ளிகள் திறக்க இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவர் பணியை முழுமையாக முடிக்க வேண்டும்.