கரூர் மாவட்டம் புகழூர் வட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி பீலிப்நகர் பகுதி மெயின் சாலையில் பஸ் நிறுத்த நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு 25 வருடத்திற்கு மேல் ஆவதால், தற்போது முன்பகுதி இடிந்து, அமரும் பலகையும் சேதமைடைந்துள்ளது. மேலும் மேற்கூரை, சுற்றுச்சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து செங்கல் வெளியே தெரிகின்றன. இதனால் பஸ் ஏற வருபவர்கள் நிழற்குடைக்கு உள்ளே செல்லாமல் வெளியிலேயே பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே இந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.