உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சியில், அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாதால், மேற்கூரை, சுவர், சுகாதார வளாகம் உள்ளிட்டவை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மையத்தின் ஒரு பகுதியில் புதர்மண்டி கிடப்பதால் விஷப் பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி விட்டது. எனவே அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.