பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Update: 2026-05-10 11:10 GMT

கரூர் மாவட்டம் முத்தனூர் வழியாக செல்லும் கொடுமுடி - பரமத்தி வேலூர் நெடுஞ்சாலை வழியாக பக்கத்து ஊர்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் முத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் நிழற்கூடம் இல்லாததால், வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதனால் அவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்