பூதப்பாண்டியில் பிரசித்தி பெற்ற பூதலிங்க சாமி கோவிலும் அதன் அருகில் தெப்பக்குளமும் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பக்குளத்திற்கு வந்து குளிப்பது மற்றும் கால்களை நனைத்து விட்டு செல்வது வழக்கம். சமீப காலமாக காதல் ஜோடிகள் தெப்பக்குளத்தின் கரைகளில் வந்தமர்ந்து கோவிலின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் அநாகரீகமாகவும், பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் மனஉலைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்.
-கோலப்பன், பூதப்பாண்டி.