திருவெண்ணெய்நல்லூர்- விழுப்புரம் சாலையில் இயங்கி வரும் தாலுகா அலுவலகத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அலுவலக வளாகத்திற்குள் வந்து மது குடிப்பது, பாட்டில்களை அங்கேயே போட்டு உடைப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.