புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பூவரசகுடி, வம்பன் நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் குரங்குகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அமைவரையும் விரட்டி கடிக்க வருகின்றது. சிறுவர்கள் கடைகளில் வாங்கிச் செல்லும் திண்பண்டங்களை பிடுங்கிச் சென்று விடுகின்றது. குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்கின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.