புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பஸ் நிலையத்தில் அதிகளவு டவுன் பஸ்கள் கிராமப்புறங்களுக்கு சென்று வருகின்றன. அத்தியாவசிய தேவைகள், அரசு அலுவலக வேலைகளுக்காக பொதுமக்கள் பஸ் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் கிராமப்புறங்களில் இருந்து குழந்தைகள், சிறுவர்களுடன் வரும் பயணிகளுக்கு பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால், அவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.