விபத்து அபாயம்

Update: 2026-05-03 14:13 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் வழியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் செடிகள் நடப்பட்டுள்ளது. தற்போது அந்த செடிகள் அதிகளவில் வளர்ந்து, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும் பஸ்சில் செல்லும் பயணிகள் மீதும் உரசுகின்றன. இதனால் எதிர்பாராமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையோர செடி, கொடிகளை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்