நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-05-03 13:15 GMT

நாகர்கோவில் வடசேரியில் மாவட்ட மைய நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்திற்கு தினமும் ஏராளமான வாசகர்கள் வந்து செல்கின்றனர். நூலகத்தில் வாசகர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. அப்போது குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதாகிய நிலையில் காணப்படுகிறது. இதனால், நூலகத்துக்கு வரும் வாசகர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, எந்திரத்தை சீரமைத்து வாசகர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரகாஷ், ராணித்தோட்டம்.

மேலும் செய்திகள்