விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?